Thursday, June 30, 2011

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 20,000௦௦௦௦ கோடி தங்க வைர இரத்தின ஆபரணங்கள்


  திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 20,000௦௦௦௦ கோடி தங்க வைர இரத்தின ஆபரணங்கள் கிடைத்துள்ளது இந்த கோவிலில் கடந்த ஒரு வாரமாக நிலவறையில் தொல்பொருள் துறையினர் மிகுந்த சிரமங்களுக்கு பின் பிராணவாயு உருளைகள் மூலம் உள் நுழைந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர் 16 அடி உயரமுள்ள தங்க மாலையில் வைரம்,ரத்தினம் பதிக்கப் பட்டு இருந்தது அது போக வெள்ளிகுடம், தங்ககுடம், ஆபரணங்கள் இருந்தது மொத்தம் ஆறு நிலவறைகள் அதில் ஒவ்வொன்றிலும் கிளை அறைகள் என கோவில் முழுவதும் சொர்ண புதையல் உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அனைத்து அறைகளும் திறந்தால் மதிப்பிடமுடியாத ஆபரணங்கள் இருக்கலாம் என தெரிகின்றது கோவிலை சுற்றி 2கிலோ மீட்டருக்கு 144 தடையுத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது 

Monday, June 20, 2011

அவன் இவன் திரைவிமர்சனம்

அவன் இவன்                                                                                                                  






சிரிப்பு 
 மணிரத்தினம் படத்தில் மழை கொட்டிக்கொண்டே இருக்கும், அடிக்குரலில் பேசுவார்கள், 90௦ சதவீதம் காட்சிகள் இருட்டில் இருக்கும், இது அவரின் பார்முலா அதை போன்றே பாலா ஒரு பார்முலா வைத்து இருக்கின்றார் ஒரு கேரக்டரை மனதில் நிற்க்கும்மாறு செய்து அந்த கேரக்டரை சாகடித்து விடுவார் சாகடிப்பதுற்க்கு ஒரு கொடூர வில்லன் அந்த வில்லனை கொல்லும் ஹீரோ இது தான் பார்முலா அதே பார்முலா தான் இந்த படமும் G.M.குமார் வெயில் திரைப்படத்தில் கொடுமை அப்பாவாக வந்தவர் காமடி செய்கின்றார் படத்தின் கிளைமாக்ஸ் வரை காமடி அதகளம்தான் பின்பு பரிதாபமாக செத்து போகின்றார்