Posted by : வீடு சுரேஸ்குமார் Friday, December 2, 2011





முத்தான முத்தழகே...
கருப்பான கட்டழகே...
என் குலசாமி நீதானே...
"அந்தியூர்" சந்தையில
கால் கொஞ்சம் ஊன'முன்னு
கழிச்சி விட்ட உன்னை
மலிவு விலையில
வாங்கி வந்த ரத்தினமே...
கருவறையில்லாத
எனக்கு மகனா
நெஞ்சறையில இருந்தவனே
என் சொக்கத் தங்கமே...
புல்லும்,புண்ணாக்கும்
வைக்க ஒரு நேரம்
தவறிவிட்டாக் கூட
அம்மா...அம்மான்னு
அழுவியே...
என் கூப்பாடு கேட்டா
வாய்க்கால் வரப்புல
துள்ளிக் குதித்து
வருவாயே என் வைரமே...
யார்! யாரோ!? ஆறுதல்
சொன்னாலும்...
"சொக்கன்" உன்னை
எடுத்துகிட்டாலும்
உன்னைத் தேடி
வருவேன்...
"கைலாயன்" வாகனமா
நீ..மாறிருந்தாலும்
நியாயமா? "பரமனே"
எனக்கேட்பேன்
தங்கமே.....

25 Responses so far.

  1. ஏக்கம் மிகுந்த வரிகள்....

  2. M.R says:

    அழகான வரிகள் கொண்ட கவிதை நண்பரெ

    தாய்ப்பாசம் எல்லா உயிர்களிடத்தும் .

  3. என்னய்யா இப்படி மனச கலக்கிட்ட..நல்லா இருக்கு!

  4. வரிகள் அனைத்தினையுமே திரும்ப திரும்ப படிக்கிறேன் நண்பரே..

    புரியாமல் அல்ல..

    தாயின் பாசத்தினை கவிதை வழியாக பருக..

    சூப்பர்.

  5. இனிய காலை வணக்கம் பாஸ்,
    கோமாதாவை வைத்து ஓர் கோலக் கவி கொடுத்திருக்கிறீங்க.

    செல்லப் பிராணியை ரொம்பத் தான் நேசிக்கிறீங்க.

  6. மனதை நெகிழச் செய்த வரிகள்..
    அசத்தல் கவிதை..

    பாசம் பற்றி இவ்வளவு எளிமையாக ஒரு கவிதையில் அடக்க முடியும் என்று நிருபித்து விட்டீர்கள்..

    ஆட்ஸ் ஆப்...

  7. விலங்கினமாக இருந்தாலும் கிராமங்களில் அவைகள் குடும்பத்தில் ஒன்றாகவே கருதப்படும்...

    ஆடு, மாடு, கோழி, நாய், பூனை ஆகியவை மீது பாசம் கொண்ட தாய்மார்கள் இன்னும் இருக்கிறார்கள்..


    அழகிய கவிதை...
    புதிய சிந்தனை...

  8. chicha.in says:

    ஹஈ .. நிசே போஸ்ட் ..

    chicha.in

  9. veedu says:

    @தமிழ்வாசி பிரகாஷ்
    வருகைக்கு நன்றி பிரகாஷ்

  10. veedu says:

    @M.R

    வருகைக்கு நன்றி சார்...

  11. veedu says:

    @விக்கியுலகம்

    மனசுல ஈரமுள்ள இதயங்களுக்கு மிருகங்கள் மனிதர்கள் என்கிற பாகுபாடு கிடையாது இது கற்பனையல்ல அனுபவம்....மாம்ஸ்

  12. veedu says:

    @சம்பத் குமார்

    உண்மைதான் சம்பத் கிராமத்தில் இன்னும் வாழ்கிறார்கள் மாடு இறந்ததால்
    துக்கத்தில் பல நாள் உணவு உண்ணாமல் வாழ்ந்தவர்களை நான் கண்டு இருக்கின்றேன்

  13. veedu says:

    @நிரூபன்
    பழகிபாருங்கள் அதை விட பெரிய தியானம் வேறொன்றுமில்லை....
    எனது தாத்தா ஒருவர் வளர்த்த நாய் அவர் இறந்து நான்கு நாட்களில் அதுவும் இறந்து விட்டது

  14. veedu says:

    @!* வேடந்தாங்கல் - கருன் *!
    பாசம் கிடைக்காமல் நம்மில் எத்தனையோ பேர் ஏங்குகின்றோம்

  15. veedu says:

    @கவிதை வீதி... // சௌந்தர் //
    ஆமாங்க...சௌந்தர் வருகைக்கு நன்றி

  16. veedu says:

    @chicha.in
    நமஸ்காரண்டி பாபு ஹஹஹ பாபு தமிழு கவித கமெண்டு ஒஸ்தாவா...பாபு ஒக்க நன்னி...

    (மக்களே தெழுங்கு வெப்சைட்ல இருந்து கமெண்ட் போட்டிருக்காங்க)

  17. பிரியமானதின் இழப்பின் சோகம் ததும்பும் கவிதை!

  18. Lakshmi says:

    மனதை கனக்கச்செய்த கவிதை.

  19. கவிதை நன்றாகவுள்ளது நண்பா.

  20. வரிகள் சிறப்பு... படம் மிக சிறப்பு
    பாராட்டுக்கள்.

  21. அருமையான வரிகள் கொடுத்து அசத்திவிட்டீர்கள்..

  22. வாயில்லா ஜீவனைப் பற்றி சொல்லி மௌனமாக அழவைத்து விட்டீர்கள்.

  23. பிரியமான பொருளானால் என்ன உயிரானால் என்ன இழப்பு வலியே...

  24. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

    * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

    * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.


    * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    * போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

Popular Post

Blogger templates

Blog Archive

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

Ads 468x60px

About Me

My Photo
I am Artist, Pencil Carver,Adope Illustrator,Adobe Photo Shop,CorelDraw Expert,Video Editing,GIF Animation Creater,Textile Designer 20year Experince 
and
kavithai,kathai Righting Blogger

உறவுகாரங்க...

Welcome to artveedu.com

இந்த பாமரனை பார்க்க வந்த நண்பர்கள்

பதிவுகள் அலமாரி!

நோம்பி வந்தா கடுதாசி போடுவோம்க...

Enter your email address:

Delivered by FeedBurner

Featured Posts

"நாளை...

- Copyright © வீடு -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -